https://www.vegetableclinic.in
VEGETABLECLINIC
https://www.vegetableclinic.in

Checking delivery availability...

background-sm
Search
Preview

This is your website preview.

Currently it only shows your basic business info. Start adding relevant business details such as description, images and products or services to gain your customers attention by using Boost 360 android app / iOS App / web portal.

919994443517
Home All Pages வெண்டைக்காய்

வெண்டைக்காய்

வெண்டைக்காய்


நாளமுள்ள சுரப்பி

 நாளமுள்ள சுரப்பி என்பது ஒரு சுரப்பி சுரந்து ஓரிடத்தில் சேமிப்பாகி வெளிப்படும். நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று அருந்தும் தண்ணீர் உள்ளே செல்கிறது. இவைகள் ஒரு குழாயின் மூலம் கடந்து செல்கிறது. ஒரு பொருள் ஓர் இடத்திலிருந்து வேறு ஒரு இடத்திற்கு செல்லும்போது உராயாமல் மென்மையாக செல்ல வேண்டும். தோலுடன் சளி சவ்வு படலம் என்ற அமைப்பு இருக்கிறது. அது அந்த உராய்வுத் தன்மையிலிருந்து பாதுகாத்து கொள்கிறது. ஒரு ஈரப்பதத்தினை ஏற்படுத்தி உள்ளுறுப்புகளுக்கு தீங்கு நேரா வண்ணம் பாதுகாக்கிறது. எங்கெல்லாம் தோல் இருக்கிறதோ அதன் அடியில் இந்த சுரப்பி மண்டலம் அமைந்துள்ளது. எனவே எல்லா இடத்திலும் இந்த சுரப்பி மண்டலம் இருக்கும். எனவே நாளமில்லா சுரப்பி மண்டலம் மிகப் பெரியது.

 

இந்த சுரப்பிகள் எண்ணெய் மற்றும் தண்ணீரை கலந்து வைத்திருக்கின்றது. தேவைப்படும் பொழுது எண்ணெய் பசை மற்றும் ஈரப்பதத்தினை மாற்றி மாற்றி அளிக்கிறது. உடலில் எப்பொழுதுமே ஈரபதத்தினை தக்க வைக்க பசை போன்ற திரவம் தேவை. இந்த ஜெல் இல்லையெனில் உடலில் ஈரபதத்தினை தக்க வைக்க முடியாது மற்றும் எண்ணெய் பசையும் இருக்காது. எனவே உடல் ஈரப் பதம் இல்லாமல் காய்ந்து விடும். இதனால் உராய்வு ஏற்படும். எந்த பொருளும் உராயும் போது சப்தம் ஏற்படும். சப்தம் வரும்பொழுது,எண்ணெய் போட்டால் சப்தம் குறையும். நமது உடலில் சளி ஜவ்வு படலம் வரண்டு போனால் குறட்டை, விக்கல் போன்றவை ஏற்படும். உடலுக்கு ஈரப்பதம் வேண்டும் என்றால் விட்டமின்ஆ3 தேவை. எனவே வெண்டைக்காயினை சாப்பிடும் பொழுது மீண்டும் அந்த ஜெல் உற்பத்தியாகும். அது செல்லக்கூடிய பாதை சுமுகமாக நடைபெறும்.

 

நாம் உண்ணும் உணவில் தேவையற்ற பொருள்களினால் (மிளகாய்) உடலில் உள்ள சளி ஜவ்வு கரைந்து வெளியேறி விடுகிறது. எனவே உடலில் ஈரபதத்தினை தக்க வைக்க முடியாது. உடலில் எண்ணெய்பசை குறைவதால் ஈரபதம் குறையும். அது போல சளி ஜவ்வு படலம் இருந்தால் தான் உடலில் சுமுகமான முறையில் பொருட்களின் பரிமாற்றம் நடைபெறும். இல்லையெனில் காய்ந்து போன நிலை ஏற்படும்.

 

 நம் உடலில் ஈரபதத்தினை தக்க வைத்துக் கொள்ளக் கூடிய மூன்று விஷயங்கள் உள்ளன. அவை.

 

1. நீர்

2. காற்று

3. இரத்தம்

 

நீரை வறட்சியில்லாமல் பாதுகாக்க .. வெண்டைக்காய்

இரத்தத்தின்சூடு குளிர்ச்சி தன்மையை பாதுகாக்க .. கொத்தவரங்காய்

காற்றில் உள்ள வெப்ப தன்மையை பாதுகாக்க .. முருங்கைக்காய்

 


இந்த மூன்றின் வெப்ப நிலையும் சரியான முறையில் இருக்க வேண்டும். இந்த வெப்ப நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் சளி பிடிக்கும்.

 

வெண்டைக்காய் சாப்பிடுவதால் தீரும் பிரச்சனைகள்

 

  • தலையில் ஈரபதம் இல்லாததால் வெய்யிலில் சென்றால் தலைவலி ஏற்படும்.

 

  • நரம்பு .. உடலில் ஈரபதம் இருந்தால் தான் செய்தி பரிமாற்றம் நடைபெறும். ஈரபதம் குறைந்தால் சிக்னல் போகாது. நரம்புகளில் அதிகமாக நீர் இருந்தால் கைகளில் நடுக்கம் ஏற்படும். ஈரபதம், நீர் இல்லையெனில் கை, கால்கள் மரத்து போகும். சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி தண்ணீர் குடிப்பது, சிறுநீர் கழிப்பதுமாக இருப்பார்கள். இதனால் உடலில் ஈரபதம் குறைந்து விடுவதால் கை, கால்கள் மரத்துப் போகும்.

  

  • கண் .. ஈரபதம் குறைந்தால் கண் மங்கலாக தெரியும்.

 

  • காது .. ஈரபதம் குறைவதால் காதுகள் தற்காலிகமாக அடைத்துக் கொள்ளும்.


  • காது .. நிரந்தர அடப்பிற்கு காரணம் .. வெப்பம். கொத்தவரங்காய் சாப்பிடவும்.

  

  • மூக்கு .. மூக்கில் உள்ள சளி காய்ந்த உலர்ந்த நிலை ஏற்படும்.

  

  • வாய் .. வறட்சியாக இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார்கள்.

  

  • தொண்டை வறட்சி, நெஞ்சில் வறட்சியினால் வரட்டு இருமல் ஏற்படும். உதரவிதானத்தில் ஈரபதம் குறைந்தால் சாப்பிடும் பொழுது விக்கல் ஏற்படும். அதனால் விக்கல் ஏற்பட்டால் தண்ணீர் குடிக்க சொல்வார்கள்.

  

  • குடலில் ஈரபதம் குறைந்தால் உணவு உண்ண செல்லும் பொழுது எரிச்சல் ஏற்படும். குடலில் உள்ள சளி ஜவ்வு கரைந்து போய் விடும். அடிக்கடி மலம் கழிப்பார்கள். சாப்பிடும் முன், சாப்பிட்ட பிறகு என்று அடிக்கடி மலம் கழியும். குடலால் மலத்தினை தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலையில் அடிக்கடி மலம் கழிப்பார்கள். இந்த நிலை ஐ.பி.எஸ் என்று அழைக்கப்படுகிறது.

  

  • அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். மேலும் உடல் ஈரபதத்தினை இழக்கும்.

  

  • தோலில் வறட்சி ஏற்படும்.

  

  • உடலில் சளிஜவ்வு படலம் இல்லையெனில் அதிக உராய்வினால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.

  

குணம் : திருப்தி

  

ஏன் உடலில் வறட்சி ஏற்படுகிறது? ஆக ஏன் ஏற்படுகிறது? திருப்தி அதிருப்தி. மனம் எப்பொழுது திருப்தி அடையும்? அதிருப்தி இருந்தால் உடல் வறண்டு விடும். திருப்தி எப்பொழுது கிடைக்கும்?

  

என்னைப் பற்றி அவர் எண்ண நினைக்கின்றார், இவர் என்ன நினைக்கின்றார், என்னைப் பற்றி யார் யாரெல்லாம் என்ன நினைக்கின்றனர் என்று யோசனை செய்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக சந்தோஷம் வராது. நான் வாழும் வாழ்க்கை முதலில் எனக்கு திருப்தியாக இருக்கின்றதா என்பதை முடிவு செய்ய வேண்டும். எனவே கௌரவம் தான் மிகப் பெரிய பிரச்சனை. “மரியாதை மற்றும் சுயமரியாதை” பிறருக்கு சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ நாம் மரியாதை கொடுப்போம். ஆனால் உண்மையில் மரியாதை யாருக்கு யார் கொடுக்க வேண்டும்? நமக்கு நாமே மரியாதை கொடுத்துக் கொள்ள வேண்டும். அன்பு என்பது பரந்து விரிந்தது. எல்லோருக்கும் கொடுக்கக் கூடியது. ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு கொடுப்பது அன்பு. ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் மரியாதையை பகிர்ந்து கொடுக்க முடியாது. மரியாதை என்பது அவர் அவர்களால் தனக்குத் தானே கொடுத்துக் கொள்வது. நான் செய்யும் ஒரு செயலை மற்றவர்கள் பார்த்து என்ன நினைக்கிறார்கள் என்ற எண்ணம் வந்து விட்டால் அது மிகப் பெரிய பிரச்சனையாக மாறும்.

 

நமக்கு என்ன உணர்வு வேண்டும் என்றால் இந்த உடல் அழியக்கூடியது. என்னுடைய பெயர், விலாசம், தொழில் , என்று இன்று இருக்கும் எந்த அடையாளமும் நிலையில்லாமல் மாறிக் கொண்டே வரும். மாற்றத்திற்கு உட்பட்டது தேக சம்பந்தமான அடையாளங்கள். நான் இன்னார், இந்த உருவம், தேசம், மொழி, போன்ற அடையாளங்களை இப்பொழுது போட்டிருக்கின்றோம். இந்த வேஷத்தினை போட்டிருப்பது ஒரு ஆன்மா. வேஷத்தை களைந்து விட்டால் வேறு ஒரு வேஷத்தினை மீண்டும் கிடைக்கும். எல்லா வேஷங்களும் நிரந்தரமாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது, மாறிக் கொண்டே இருக்கும். ஆன்மா எந்த வேஷத்தை எடுத்தாலும் அதன் தன்மையை இழப்பதில்லை.

 

நாம் யார்?

  

ஆன்மா தான் நமது உண்மையான அடையாளம். அகம் ஆன்மா. நான் உடல் அல்ல. நாம் சுயமரியாதையோடு இருந்திருந்தால் நாம் மரியாதை என்பதை இழக்க வேண்டிய அவசியமில்லை. நீ சுயமரியாதையோடு இருந்தால் மற்றவர்களை விட ஒரு படி மேல் உயர்ந்து நிற்கலாம். “நாம் ஆன்மா”அதற்கென்று ஒரு மரியாதை இருக்கிறது. நாம் அந்த நிலையிலிருந்து இறங்கக் கூடாது. நாம் நமது உண்மையான அடையாளங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது. நான் அழிவற்றவன். நான் ஆத்ம தேசத்தை சார்ந்தவன். நான் பரமாத்மாவின் பிள்ளை. இவைகள் தான் நமது உண்மையான அடையாளங்கள். இந்த ஞானம் ஒருவருக்கு கிடைத்தால் அவருடைய அஞ்ஞானம் என்ற இருள் விலகும்.

  

நமக்கு முக்கியமாக நான்கு அடையாளங்கள் இருக்கின்றன.

 

1. நான் இந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னுடைய தாய் தந்தை இவர்கள். இது என்னுடைய குழந்தை. இது ஒரு அடையாளம்.

2. நான் இந்த சமூகத்தைச் சேர்ந்தவன். இந்த மொழி பேசுபவன், இந்த ஜாதி மதத்தை சார்ந்தவன் என்பது ஒரு அடையாளம்.

3. நான் இந்த தேசத்தைச் சேர்ந்தவன் என்பது ஒரு அடையாளம்.

4. நான் ஒரு ஆண், நான் ஒரு பெண். இது ஒரு அடையாளம்.


 

இது ஒரு தவறான அடையாளம். நான் ஆணுமல்ல, பெண்ணுமல்ல. நான் ஒரு ஆத்மா. ஆன்மாவிற்கு ஆண், பெண் அடையாளம் இல்லை.

  

யார் ஒருவர் இந்த நான்கு அடையாளங்களையும் கடந்து இருக்கிறாரோ அவர் தான் வாழ்கையில் வெற்றி பெற்றவர்.

 

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.


 

 ஈஸ்வரன் எந்த அடையாளமும் இல்லாதவர். உருவம், சப்தத்திற்கு அப்பாற்பட்டவர். அது போல் நாமும் இருக்க வேண்டும். அப்பா மாதிரி பிள்ளை ஆக வேண்டும்.


எனவே இந்த நான்கு அடையாளங்களும் ஒரு இருட்டு. இந்த அடையாளம் என்பது உண்மையில்லை என்று யாருக்கு இது தெரிகிறதோ அவரால் தான் முக்தி அடைய முடியும். இதற்காக தான் மாசி மாதம்மஹா சிவராத்திரி என்ற விழா கொண்டாடப்படுகிறது. மனிதர்கள் அறியாமை என்னும் இருட்டிலிருந்து வெளி வர வேண்டும். அறிவு சார்ந்த இருட்டில் இருப்பது தான் அறியாமை. அறியாமை என்ற இருள் இருந்தால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. எனவே அடையாளங்களை நம்பினால் நமக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.


ஐம்புலன்களையும் கடந்த நிலையில் இருக்கின்ற சுகம், இதற்கு அதீந்திரிய சுகம் என்று பெயர். அந்த அதீந்திரிய சுகத்திற்கு வழிகாட்டுபவர் தான் சிவன். நீயும் இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்க பழகு என்பதை கொண்டாடுவது தான் மஹாசிவராத்திரி. இந்த ஐம்புலன் உணர்வுகளைத் தாண்டி யார் வாழ்கிறார்களோ அவர்கள் தான் மதிப்பு மிக்கவர்கள். இதன் அடையாளம் தான் குடும்பம். யார் ஒருவரால் புலன்களிலிருந்து விடுபட முடியுமோ அவர்கள் தான் பெரியவர்கள், மதிப்பு மிக்கவர்கள்,மற்றவர்கள் எல்லாம் அடிமைகள்.

 

நாளமில்லா சுரப்பி மண்டலம் உடலை எப்பொழுதுமே சுமூகமாக நடத்திச் செல்லும். வாழ்க்கையில் எப்பொழுதுமே சுமுகமாயிருப்பார்கள். யாருடனும் உரசிக் கொள்ள மாட்டார்கள். பொதுவாக மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமாகயிருப்பார்கள். திருப்தியாக இருப்பார்கள். பெற்றதை கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருப்தி இல்லையெனில் உடலில் உராய்வு ஏற்படும்.  முக்கியமாக அழுத்தம் வரக் காரணம் மனம் திருப்தியாக இல்லை. திருப்தி இல்லாததால் எல்லாம் இருந்தாலும் கூட ஒரு வெறுமையுடன் இருப்பார்கள். ஐம்புலன்களையும் அடக்க தெரிய வேண்டும். மனதை மிக சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஏமாற்றத்தையும் தாங்கிக் கொண்டு உலகம் போகிற போக்கில் சென்று விட வேண்டும். எந்த சூழ்நிலையையும் ஏற்றுக் கொள்பவர்களுக்கு ஆயுள் நிச்சயம் அதிகரிக்கும். மகிழ்ச்சி என்பது நிச்சயம். நம்மிடம் என்ன உள்ளதோ அதை வைத்து மகிழ்ச்சியாக வாழத் தெரிய வேண்டும். எது இருந்தாலும், இல்லையென்றாலும் திருப்தியாக வாழ வேண்டும்.


  • 2019-07-25T03:05:11
  • 0

Other Pages

View All Pages
remediesHome வெண்டைக்காய்