https://www.vegetableclinic.in
VEGETABLECLINIC
https://www.vegetableclinic.in

Checking delivery availability...

background-sm
Search
Preview

This is your website preview.

Currently it only shows your basic business info. Start adding relevant business details such as description, images and products or services to gain your customers attention by using Boost 360 android app / iOS App / web portal.

919994443517
Home All Pages பீர்க்கன்காய்

பீர்க்கன்காய்

நிணநீர் மண்டலத்தின் பணி

 

 

நாம் உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் நம் உடம்பை பொருத்தவரை அது ஒரு அந்நியப் பொருளே. அந்தப் பொருள் சரியா? தவறா? தேவையா என்பதை தீர்மானித்த பிறகு தான் உடல் அதை ஏற்றுக் கொள்ளும். உடம்பு அதை சரியாக பகுத்தறிய வேண்டும். இதை செய்வது தான் நிணநீர் மண்டலத்தின் பணியாகும். அதாவது அந்த பொருளை உடலுக்கு உண்டான பொருளாக மாற்றக் கூடிய சாதனம் தான் நிணநீர் மண்டலமாகும். உடம்பின் அறிவு என்பது நமது நோய் எதிர்ப்பு திறன் தான். உடலில் எந்த பிரச்சினைகள் வந்தாலும் அதனை அழித்து உடலை விட்டு வெளியேற்றும். உடலுக்கு வேண்டிய பொருளாக இருந்தால் அதனை மாற்றம் செய்து (METABOLISM) ஏற்றுக் கொள்ளும்.

 

 

ஒரு பொருள் உடலுக்கு உள்ளே செல்வதற்கும், வெளியேற்றுவதற்கும் கோவைக்காய். ஆனால் உடலுக்கு ஒரு பொருள் தேவையா? இல்லையா என்று நிர்ணயம் செய்வது பீர்க்கன்காய்.

 

 

இந்த நிணநீர் மண்டலம் தான் உடலுக்கு தேவையான ஒன்றை உருவாக்கும். தேவையில்லையெனில் அழித்து உடலை விட்டு வெளியேற்றும். இது இரத்த ஓட்டம் போன்று உடலில் சுழற்சி பெற்று வருகிறது. எந்த ஒரு பொருளையும் வேறு ஒரு பொருளாக மாற்றும்.

 

 

நம் உடலில் உள்ள கழிவுகள், அதாவது செல்லுக்குள் சென்ற இரத்தம் பயன் பாட்டிற்கு பிறகு கழிவாக, எச்சமாக மாறும். இந்த கழிவினை எடுத்து செல்லும் செயலினை செய்வது நிணநீர் மண்டலமாகும். மேலும் சாப்பிட்ட உணவின் சக்தி இரத்தத்தில் கலப்பதற்கும் உறுதுணை செய்கின்றது. இது நோய் எதிர்ப்பு திறனுக்கான சிறப்பு மண்டலமாகும்.

 

 

நாம் விடும் மூச்சு, அருந்தும் நீர், உண்ணும் உணவு இரத்தத்துடன் கலந்து செல்லிற்கு செல்லும். எனவே நாம் உண்ணும் உணவு உடலுக்கு தகுதி தானா? என்றும் எல்லா அடையாளங்களும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றதா என்று சரி பார்த்து அனுமதி கொடுக்கும். இல்லையேல் நம் உணவில் ஏதேனும் விஷங்கள் இருந்தால் அவற்றை அழித்து உடலினை விட்டு வெளியேற்றும். இதன் ஒப்புதல் இன்றி உணவின் சக்தி உடலோடு கலக்காது.

 

 

இந்த நிணநீர் மண்டலம் உடலின் எல்லா பகுதிகளிலும் இருக்கின்றது. கால் பாதம் இதற்கு முக்கியமான இடமாகும். இரத்தம் இருதயத்தின் மூலம் பம்ப் செய்யப்பட்டு உடலின் எல்லா பாகங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. ஆனால் நிணநீர் மண்டலம் காலில் இருந்து பம்ப் செய்யப்படுகின்றது. எனவே நாம் எந்தளவிற்கு நடக்கின்றோமோ அந்தளவிற்கு நிணநீர் காலிலிருந்து மேலேறி கழுத்து வரை இரத்தத்துடன் கலந்து செல்லும். இதில் ஏதேனும் பிரச்சினைக்குரிய ஒரு பொருள் வந்தால் அதனை அழித்து கொன்று சீழினை உருவாக்கி வெளியேற்றும். எனவே சீழ், பரு உருவாவது என்பது நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியத்தை குறிக்கின்றது. அதாவது எதிர்த்து போராடும் ஆற்றல் உள்ளது என்று அர்த்தம். அது போன்று நம் உடலில் தோன்றிய புண்கள் குணமாகின்றது என்றால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது என்று அர்த்தம். எனவே இதனை நோய் எதிர்ப்பு சக்தி என்றும் கூறலாம்.

 

 

  • நோய் எதிர்ப்பு திறன் குறையும் பொழுது உடல் சூடாகும். கையை தொட்டாலோ அல்லது நாம் உட்கார்ந்து எழுந்த பிறகு அந்த இடம் சூடாக இருக்கும். நம் உடலில் உள்ள கிருமிகளை அழிப்பதற்காக உடலின் வெப்பநிலை அதிகரிக்கப்படுகின்றது. அந்த சூட்டினால் தான் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப் படுகின்றன. அதிகப்படியான உடற்சூட்டினால் தலைவலி ஏற்படும்.

 

 

  • நரம்பு : நரம்புகள் தேவையில்லாமல் தானாகவே துடிக்கும்.
    (கண் இமைகள் துடித்தல்)

 

 

  • கண் : நம் உடலில் உள்ள உறுப்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஒரு பகுதி நன்றாக இருக்கும். மறுபகுதி பாதிக்கப்பட்டிருக்கும். அது போல கண்ணீரில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் ஒரு பகுதி தெரியும். மறு பகுதி தெரியாது. அதாவது பகுதி பார்வை ஏற்படும்.

 

 

  • காது : காதை சுற்றிலும் வீக்கம், புண்கள், பருக்கள், சீழ் கட்டிகள் ஏற்படலாம்.

 

 

  • மூக்கு : அதிகப்படியான சூட்டினால் சளி மஞ்சள் நிறமாக வெளியேறும். எதிர்ப்பு சக்தியே தடுமாறும் அளவிற்கு சளி அதிகமாகியுள்ளது என்று பொருள்.

 

 

  • வாயில் புண்கள் ஏற்படும். பல் துலக்கும் போது இரத்தக் கசிவு ஏற்படும். நெஞ்சு பகுதியில் புண்கள் ஏற்பட்டு இருமும் போது சளியுடன் சீழ், இரத்தம் வரலாம்.

 

 

  • வயிற்றில் புண்கள் இருப்பதால் சாப்பிட்டால் வயிறு எரிச்சல் ஏற்படும்.

 

 

  • சீழ், இரத்தத்துடன் மலம் வெளியேறும்.

 

 

  • சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரில் சீழ் வெளியேறும். தோலில் சீழ், பருக்கள், கட்டிகள் தோன்றும்.

 

 

  • உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைவதால் தான் சர்க்கரை நோய் ஏற்படுகின்றது.

 

நோய் எதிர்ப்பு திறன் குறையும் அளவிற்கு நாம் என்ன சாப்பிடுகின்றோம்?

 

 

நாம் உண்ணும் உணவு குளுக்கோசாக மாறுகின்றது. இந்த குளுக்கோஸ் கிளைக்கோஜனாக மாற்றம் பெற வேண்டும். உடம்பில் குளுக்கோஸ் கிளைக்கோஜனாக மாற வேண்டும். ஆனால் மாற்றம் நடைபெறவில்லை. இதற்கு காரணம் உடலில் விட்டமின் ஆ5 இல்லை. இந்த விட்டமின் ஆ5 இருந்தால் தான் இன்சுலினை செயற்பட வைக்க முடியும்.

 

 

நமது உடல் இந்த விட்டமின் ஆ5யை அதிகமாக உபயோகித்து பற்றாக்குறையாகிவிட்டது. இதற்கு காரணம் உடலுக்கு எதிர்மறையான ஒரு பொருள் வரும்பொழுது அது அழிந்து விடுகின்றது. நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து விட்டோம்.ஏனெனில் நம் உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருளை நாம் சாப்பிட்டு விட்டோம். அந்த பொருள் தான் பச்சைமிளகாய்,வரமிளகாய் இது உடலுக்கு எதிரியாக வேலை செய்யும்.

 

 

மிளகாய் என்பது உணவு பொருள் அல்ல. அது ஒரு விஷப்பொருள். மிளகாயில் சயனைட் என்றும், நஞ்சு மைக்ரான் அளவில் உள்ளது. இது உடல் செல்களை அழித்து விடும்.

 

 

உணவில் உள்ள விஷத்தை வெளியேற்ற நிணநீர் மண்டலம் அதிகமாக வேலை செய்யும். அதிகமாக வேலை செய்து, செய்து சோர்ந்து விடும். அதனால் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து விடும். மிளகாய் சாப்பிட, சாப்பிட நோய் எதிர்ப்பு திறன் குறையும். உடம்பில் புண்கள் ஏற்பட்டால் ஆறாது. சர்க்கரை நோய் ஏற்பட முக்கிய காரணம் இந்த பச்சை மிளகாய், வரமிளகாய், மிளகாய் தூள். இந்த மூன்றும் சாப்பிட்டால் நிச்சயமாக ஆரோக்கியம் என்பது இருக்காது. தலை முதல் பாதம் வரை நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு நோய் ஏற்படும் என்பது விதி.

 

 

நம் உடலில் நோய் ஏற்பட இரண்டு முக்கியமான காரணங்கள்,

 

1. மிளகாய்,

2. ரீபைண்டு ஆயில்.

 

இவை இரண்டும் மிகக் கொடுமையானது, விஷத் தன்மை உடையது. ஒருவர் சாக வேண்டும் என்றால் விஷத்தை சாப்பிடலாம். தினமும் விஷம் சாப்பிட்டால் (பச்சைமிளகாய்) உடலின் எந்த உறுப்பும் இறந்து போகலாம்.

 

 

எப்பொழுது நாம் மிளகாயை பயன்படுத்த துவங்கினோமோ அன்றிலிருந்து நம் ஆரோக்கியம் கெட்டு விட்டது. மிளகாய் மதுவகையை காட்டிலும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும். மிளகாயை எடுத்துக் கொள்ளும் போது நமது கல்லீரல் படிப்படியாக இறந்து போகும்

 

 

எனவே ஒவ்வொரு வீட்டிலும் மிளகாயின் பயன்பாட்டைத் தவிர்த்தாலே மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் துளியும் இருக்காது. பச்சை மிளகாய், வரமிளகாய், பயன்பாட்டினால் உடலின் மொத்த உறுப்புகளும் செயல் இழக்கும்.

 

 

எனவே நாம் நமது பாரம்பரியமான இஞ்சி, மிளகு, திப்பிலியை காரத்திற்காக பயன்படுத்தினால் நோய்கள் நம்மை அணுகாது. சீரணமும் நன்றாக அமையும்.

 

 

“புரோட்டீன்” சார்ந்த உணவுகளுக்கு இஞ்சியையும், “கார்போஹைட்ரேட்” சார்ந்த உணவுகளுக்கு மிளகையும், “கொழுப்பு” சார்ந்த உணவுகளுக்கு திப்பிலியையும், நாம் பயன்படுத்த வேண்டும். இவையே உண்மையான கார வகைகள்.

 

 

ரீபைண்டு ஆயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய், கடுகெண்ணெயை பயன்படுத்தவும்.

 

 

குணம் : உள்முகம்

 

 

அறிவு என்பது விழிப்புணர்வு. உள்ளுக்குள் இருக்கும் உண்முகம், உள்ளுணர்வு. இது இறைவன் கொடுத்த வரம். உங்களுக்கு கருத்துக்கள் ஏதேனும் கிடைக்காவிட்டால், உங்கள் மனதை நோக்கி பயணம் செய்தால் அதுவே உங்களுக்கு விடை கொடுக்கும். இதுவே மனசாட்சி, உள்முகம், உள்ளுணர்வு என்று அழைக்கப்படுகின்றது. உள்ளுணர்வு என்ன சொல்கிறது? நாம் பேசும்போது, நடக்கும்போது, சாப்பிடும்பொழுது நம் உள்ளத்தில் உதிக்கும் எண்ணம் என்ன என்பதை ஆராய்ந்தால் நமக்கு விடை கிடைக்கும். இதுவே உள்முகம் என்று கூறப்படுகிறது. இது நமக்கு எப்பொழுதுமே நிரந்தரமாக கடவுள் நமக்கு அளித்த மிகப்பெரிய கொடை. இதை பயன்படுத்துவதும், பயன்படுத்தாததும் அவரவர் கையில் இருக்கிறது. இதை ஆக்கபூர்வமாக பயன்படுத்த நமக்கு விடைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

 

 

நமது வேதங்கள், சாஸ்திரங்கள் இவை எல்லாமே மனிதனின் உள்ளுணர்வால் கிடைக்கப்பெற்றவை. இன்றும் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இந்த சமயத்திலும் யாருக்கு அந்த மனபக்குவம் உள்ளதோ அவர்களால் எதையும் படிக்காமலேயே வேதத்தின் பொருளை உணரவும் முடியும் என்பது மட்டும் அல்ல வேதங்கள் சொல்ல தவறியது அல்லது காலத்தால் அழிந்துவிட்ட வேதங்களில் கருத்துக்களையும் மீண்டும் உலகில் எடுத்துரைத்து அதன்படி வாழ்ந்து காட்டவும் முடியும். எங்கோ, எப்பொழுதோ, யாரோ சொல்வது தான் உண்மை அல்ல. இப்பொழுதும் இங்கே உங்களால் அதை செய்ய முடியும். உங்களை நீங்களே உணரக்கூடிய தன்மையிருந்தால் நமக்கு நாமே பயணம் போகக் கூடிய தன்மையிருந்தால் நமக்கும் அது கிடைக்கும்.

 

 

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

 

ஒவ்வொருவரும் ஒரு கருத்தினை கூறுகிறார்கள். எனவே நாம் எதை நம்புவது? நாம் அதிகமாக படித்தால் அறிவாளியா? அறிவு என்றால் என்ன? யாரால் மெய்ப்பொருளை பார்க்க முடியுமோ அவர்கள் தான் அறிவாளிகள். யாரால் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறதோ, புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களுமே அறிவாளிகள்.

 

 

இந்த உள்நோக்கு தன்மை நம்மை அந்த இறைவனிடம் கொண்டு போய் சேர்க்கும். மண்ணிலிருந்து உருவானது தான் இந்த உடம்பு. அது மீண்டும் மண்ணோடு மண்ணாக போய் விடும். ஆனால் அதில் இருக்கும் சத்தியம் என்னவெனில் நமது ஆன்மா, அது அழிவற்றது, அவிநாசி என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்க்கை என்பது அழிவற்ற ஆன்ம உணர்வை அடையும் பயணமாக இருக்க வேண்டும். இதை உணர, உணர்த்த எந்த சாமியாரும், குருவும் தேவையில்லை, ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை.

 

 

இதற்கு பொறுமை இருந்தால் இதை நாம் எளிமையாக செய்ய முடியும். இருட்டறையில் ஒரு விளக்கினை ஏற்றி அந்த தீபத்தை பார்த்தால் தானாகவே உங்களுக்கு புரியும். ஏனெனில் ஆன்மாவின் வடிவம் ஒளி வடிவமாக இருக்கின்றது என்று நமது ஞானிகள் உணர்ந்துள்ளனர். ஆகவே என்னை நான் பார்க்க வேண்டும் என்றால், ஒரு விளக்கின் தீபத்தினை பார்த்தால் அது என்னையே (ஆன்மாவை) பார்பதற்கு சமம். இந்த கண்களின் வழியாக என்ன பார்க்கப்படுகிறதோ அது ஆன்மாவை சென்றடைகிறது. ஒரு விளக்கின் தீபத்தை ஒரு அரைமணி நேரம் பார்த்தால், இந்த உலகத்தில் யாருமே சொல்லி தராத ஞானம் உங்களுக்கு புரியும். யாருமே காட்டாத வழி உங்களுக்கு தெரியும். இது சத்தியம். இது உண்மை. உங்களுடைய இரண்டு கண்களால் இந்த ஆன்மா தன்னுடைய உருவத்தையே இந்த பூமியில் முன்னால் பார்த்தால் அது சந்தோஷப்படும். நான் ஆன்மா அந்த ஆன்ம உணர்வோடு வாழ்ந்து அடுத்த நிலைக்கு செல்ல பாமரனுக்கும் எளிமையான ஒரு வழியை நம் முன்னோர்கள் நமக்கு பயிற்சி வடிவாக கொடுத்தது நம் அதிர்ஷ்டம்.

 

 

இதற்காக ஒரு கோவிலை கட்டி அதன் கருவறையை இருட்டாக்கி அதனுள் ஒரு சிலையை வைத்து அதை தீப ஒளியால் காட்டி, அதை வெளியில் கொண்டு வந்து வணங்குகின்றோம். அந்த ஒளியைத் தான் நாம் வணங்குகின்றோம். அந்த உடம்பில் குடி கொண்டிருக்கும் ஆன்மாவை பார் என்று தான் பொருள். ஆன்மாவைப் பற்றி கருத்துக்கள் மட்டும் அல்லாமல் அதை உணர வைத்தது தான் சிறப்பு. ஒரு விளக்கினை மட்டுமே வைத்து ஆன்மீகத்தை புரிய வைத்தார்கள். எந்த குருவும், சத்சங்கமும் தேவையில்லை. நீங்களே உங்களுக்கு குருவாகலாம். இதற்கு ஒரே விதி பயிற்சி செய்வது மட்டுமே. இதை தூங்குவதற்கு முன்பாக அல்லது காலை எழுந்த உடனே செய்யலாம். இரு வேளை செய்வது மிகவும் சிறப்பு. தூங்கும் போது தன்னை உணர்ந்த நிலையில் தூங்க வேண்டும். எழும்போது தன்னை உணர தெரிய வேண்டும். இந்த இரண்டு இடைவெளியையும் உங்களால் நிரப்ப முடியும் என்றால் உங்களால் எதையும் செய்ய முடியும்.

 

 

இதை உணர்த்த கார்த்திகை மாதம், கார்த்திகை தீபம் அல்லது பெரிய ஜோதி என்று திருவண்ணாமலையில் கொண்டாடப்படுகின்றது. அகத்தில் உள்ள ஒளியை காண்பது உள்முகம். நான் உண்மையில் ஒரு அழிவற்ற ஆன்மா. நாம் விளக்கேற்றி அந்த ஒளியைப் பார்த்தால் நம்முடைய உள்ளொளி பெருகும் என்பதற்கான பயிற்சியே தீப வழிபாடு. அகத்தில் உள்ள இருள் அகலும். அறியாமை என்னும் இருள் அகலும். நாம் ஆன்ம உணர்வு பெற்று அதன் வழியில் செல்ல வேண்டும்.

 

 

தன்னை உணர்ந்து விட்டால் உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களின் விளக்கமும் உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும். எனவே ஆன்மீகத்தை சொல்லி தர உலகிலே மிகச் சிறந்த குரு யார் என்றால் அந்த தீபஒளி மட்டுமே. எது ஒளியாக தெரிகின்றதோ நான் அதுவாகத் தான் இருக்கின்றேன் என்று மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரே மந்திரத்தை லட்சம் முறை கூறுவதால் அதை லட்சார்ச்சனை என்று கூறுகிறோம்.

 

 

“அதுவாகத் தான் நான் இருக்கின்றேன்” “நானாகத் தான் அது இருக்கின்றது” .

 

 

என்று திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் தானாகவே அந்த ஆன்மா வெளிப்படும். புரியாத விஷயங்கள் புரிதலுக்கு உட்படும். தேவையில்லாதவை உங்களிடமிருந்து விலகும்.

 

 

உள்முகம் என்பது இறைவனால் படைக்கப்பட்ட ஒரு கருவி, ஒரு இரகசியம். இந்த இரகசியத்தை நீங்கள் பிடித்துக் கொண்டால் உலகின் மிகச் சிறந்த படைப்பாளியாக விளங்க முடியும். உங்களுக்குள்ளாகவே ஒரு நிறைவைப் பெற்று எங்கிருந்து வந்தீர்களோ அந்த இடத்தினை அடைய முடியும்.


  • 2019-07-25T03:03:24
  • 0

Other Pages

View All Pages
remediesHome பீர்க்கன்காய்